"பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக இருக்கும்'"பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக இருக்கும்' ... தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு ...
நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
00:45

மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திரங்களில், இதுவரையிலுமாக, 2.04 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், கடந்த 2012ம் ஆண்டில், இந்நிறுவனங்களின் கடன்பத்திர முதலீடு, 4.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
நிதி சந்தைகள்:பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, முதலீட்டாளர்களிடமிருந்து, நிதி திரட்டி, நிறுவனங்களின் பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் நிதி சந்தைகளில் முதலீடு செய்கின்றன.இவ்வகையில், நடப்பாண்டில், இதுவரையிலுமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.
பங்குகள்:கடந்த 2012ம் ஆண்டில், இந்நிறுவனங்கள், நிகர அளவில், 20,653 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்து உள்ளன.பரஸ்பர நிதி நிறுவனங்கள், அதிகளவில், பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பாண்டில், இது வரையிலுமாக, 79,554 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 5,212 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனப் பங்குகளை விற்பனை செய்திருந்தன. இது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், முறையே, 848 கோடி மற்றும் 1,614 கோடி ரூபாயாக இருந்தது.இது, ஏப்ரல் மாதத்தில், 539 கோடி ரூபாயாகவும், மே மாதத்தில், இதுவரையில், 2,708 கோடி ரூபாயாகவும் உள்ளது.மார்ச் இறுதிவரையிலுமாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், 1,294 திட்டங்களை கொண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
சொத்து மதிப்பு:கணக்கீட்டு காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு சார்ந்த வகையில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 1.79 லட்சம் கோடியாகவும், கடன் சார்ந்த வகையில் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 4.90 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது என, "செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)