நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடுநிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் ... ... தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு தங்க நாணயம் மீது கடன் ; ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எரிவாயு வளம் குறித்த தகவலால் பங்கு வர்த்தகத்தில் விறுவிறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
00:46

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்கதினமான திங்கட்கிழமையன்று அதிக, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, "சென்செக்ஸ்', 1.66 சதவீத உயர்வுடன், 20,000 புள்ளிகளை கடந்தும், "நிப்டி', 6,000 புள்ளிகளை தாண்டியும் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம், கிழக்கு கோதாவரி படுகையில், புதிய எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளது என்ற செய்தியால், அந்நிறுவனப் பங்கின் விலை, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, 5.12 சதவீதம் அதிகரித்து, 828.25 ரூபாய்க்கு கைமாறியது. நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, உலோகம், ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 326.44 புள்ளிகள் அதிகரித்து, 20,030.77 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,083.47 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,678.31 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சிப்லா, மாருதி, மகிந்திரா ஆகிய மூன்று நிறுவனங்களை தவிர, ஏனைய, 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 99.60 புள்ளிகள் உயர்ந்து, 6,083.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,099.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,975.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)