பதிவு செய்த நாள்
28 மே2013
00:46
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்கதினமான திங்கட்கிழமையன்று அதிக, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, "சென்செக்ஸ்', 1.66 சதவீத உயர்வுடன், 20,000 புள்ளிகளை கடந்தும், "நிப்டி', 6,000 புள்ளிகளை தாண்டியும் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம், கிழக்கு கோதாவரி படுகையில், புதிய எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளது என்ற செய்தியால், அந்நிறுவனப் பங்கின் விலை, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, 5.12 சதவீதம் அதிகரித்து, 828.25 ரூபாய்க்கு கைமாறியது. நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, உலோகம், ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 326.44 புள்ளிகள் அதிகரித்து, 20,030.77 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,083.47 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,678.31 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சிப்லா, மாருதி, மகிந்திரா ஆகிய மூன்று நிறுவனங்களை தவிர, ஏனைய, 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 99.60 புள்ளிகள் உயர்ந்து, 6,083.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,099.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,975.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|