தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72  குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
நெல் வரத்து குறைவால் உயருது அரிசி விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
13:31

நெல் வரத்துக் குறைவால், அரிசி விலை, மீண்டும் உயர்ந்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு வரப்படுகிறது. கடந்த பிப்ரவரி, மார்ச்சில் அறுவடை முடிந்து, ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை, அரிசி ஆலைகளுக்கு, முழுமையாக, நெல் வரத்து இருக்கும்.வறட்சியால், கடந்த மாதம் நெல் வரத்து, 50 சதவீதம் குறைந்தது. கர்நாடகா, ஆந்திரா நெல் கொண்டு வந்தால், கட்டுப்படியாகாது என்பதால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளிலான நெல் வரத்தை, ஆலைகள் நம்பி உள்ளன.அரிசி விலையில் மாற்றம் குறித்து, ஆலை அதிபர்களுடன், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, ஒரு மாதமாக, அரிசி விலை நிலையாக இருந்தது. கூட்டுறவு அங்காடி மூலம், 20 ரூபாய்க்கு அரிசி விற்பதாலும், வெளி மார்க்கெட்டில் அரிசி விலை, மாற்றமின்றி இருக்கிறது. இந்நிலையில், சில நாட்களாகவே, அரிசி விலை கிலோவுக்கு, 2 முதல், 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கிலோ, 50 ரூபாய்க்கு விற்ற சோனா பொன்னி, 53க்கும், கிலோ, 48 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, 50 ரூபாய்க்கும், 34 ரூபாய்க்கு விற்ற இட்லி அரிசி, 36 ஆகவும் உயர்ந்துள்ளது.அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "நெல் வரத்து, குறைந்து விட்டது. இருப்பு வைத்துள்ள நெல்லை, அரைக்கிறோம். புதிதாக வரத்து இல்லை. அப்படியே வரும் நெல் விலையும், மூடைக்கு, 50 முதல், 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அரிசி, 100 கிலோ விலை, டீலக்ஸ் பழையது, 4,800 ரூபாய்; புதுசு, 3,700 ரூபாய், கல்சர், 3,200 ரூபாய்; அதிசய பொன்னி, 3,200 ரூபாய். இது கடைகளில், 2 முதல், 5 ரூபாய் வரை கூடுதலாக, விலை வைத்து விற்கப்படுகிறது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)