பதிவு செய்த நாள்
29 மே2013
01:03
மும்பை:கடந்த ஒரு வார காலமாக, உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை, 15 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக, மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.கிராமப்புறங்கள்இம்மாதம் அட்சய திருதியையின் போது, நாடு தழுவிய அளவில், குறிப்பாக தென் மாநிலங்களில், தங்கத்திற்கான தேவை அதிகரித்திருந்தது.ஆனால், கடந்த ஒரு வார காலமாக, இதற்கான தேவை, படிப்படியாக குறைந்து போயுள்ளது. நடப்பாண்டில், மொத்த தங்கத்திற்கான தேவையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு, 65 சதவீத அளவிற்கு இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், நாட்டின் பல பாகங்களில், பருவ மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள், விதைகள், உரங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்காக, தங்களுடைய சேமிப்பை பாதுகாத்து வைத்துள்ளனர். வானிலை ஆய்வு மையம், நடப்பாண்டில் பருவ மழை நன்கு இருக்குமென, மதிப்பீடு செய்துள்ளது. எனவே இவ்வாண்டு, கிராமப்புறங்களில், தங்கம் வாங்கும் போக்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 55.60 ரூபாய் என்ற அளவில் மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால், தங்கத்திற்கான இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. இதனாலும், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி:இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 118 டன்னாக இருந்தது. இது, நடப்பு மே மாதத்தில் இதுவரையிலுமாக, 80 டன்னாக மிகவும் சரிவடைந்து உள்ளது. வங்கிகளிடம், அதிகளவில் தங்கம் கையிருப்பு உள்ளது.எனவே ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், தங்கத்திற்கான தேவை அதிகரித்தாலும், அதை ஈடு செய்யும் அளவிற்கு, இருப்பு இருப்பதாக மும்பையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த ஒரு வார காலமாக, தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கமின்றி நிலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|