பதிவு செய்த நாள்
29 மே2013
12:43
திருப்பூர்: இந்தியாவில், குழந்தை ஆடைகள் வர்த்தகம், ஆண்டுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடப்பதாக, இந்திய தர நிர்ணயக் கலந்தாய்வுக் குழு, தெரிவித்து உள்ளது. இந்திய தர நிர்ணயக் குழுமம் சார்பில், புழக்கத்தில் உள்ள பனியன், ஜட்டி, பேண்டீஸ் மற்றும் டி-சர்ட் போன்ற பொருட்களுக்கு, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று வழங்கப்படுகிறது. நுகர்வோரின் விருப்பம் கருதியும், ஜவுளி பொருட்களின் தற்போதைய தர நிலவரத்தைக் கருதியும், அவ்வப்போது மாறுதல் செய்து, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று வழங்கப்படுகிறது.
தற்போது, ஸ்டைல், டிசைன் போன்றவைகளை விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல் செய்வதைக் கருத்தில் கொண்டு, திருப்பூர், "சைமா' சங்கக் கூட்ட அரங்கில், தரச்சான்று அதிகாரிகள் மற்றும் பனியன் உற்பத்தியாளர்கள் அடங்கிய, கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய ஜவுளித் துறை கமிஷன் சார்பில், தர நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையில், குழந்தை ஆடை உற்பத்திக்கான தேவை அதிகரித்துள்ளது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. இந்தியாவில், தற்போது, குழந்தைகள் ஆடை விற்பனை, ஆண்டுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும், குழந்தைகள் ஆயத்த ஆடை தயாரிப்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து, தர நிர்ணயம் செய்ய வேண்டும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|