தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ... சகாரா முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படுகிறது சகாரா முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படுகிறது ...
என்.எல்.சி., நிறுவனத்துக்கு மின் வாரியம் ரூ.2,728 கோடி நிலுவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
01:24

சென்னை: ""தமிழ்நாடு மின்சார வாரியம், 2,728 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளது,'' என, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேந்தர் மோகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 1,460 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. 2.62 கோடி டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நெய்வேலியில், 250 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பரில், முதல் அலகு செயல்பாட்டு வரும். அடுத்த ஆண்டு ஜனவரியில், இரண்டாவது அலகு செயல்படும்.தூத்துக்குடியில், தமிழக அரசுடன் இணைந்து, 500 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும். சீர்காழியில், 4,000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சார வாரியம், 2,728 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' விதிமுறைப்படி, 10 சதவீத பங்குகள் பொது மக்களிடம் இருக்க வேண்டும். அதன்படியே, 5 சதவீத பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. பங்கு விற்பனை குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம், நிலக்கரி மற்றும் பங்கு விற்பனை அமைச்சகங்களுக்கு மட்டுமே உண்டு.நிறுவனத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களின் பணி மூப்பு பட்டியல், இரு மாதங்களில் வெளியிடப்படும். காலி பணியிடங்களுக்கு ஏற்ப, பணியாளர்கள் நிரப்பப்படுவர்.இவ்வாறு சுரேந்தர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)