பதிவு செய்த நாள்
30 மே2013
01:27
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான சென்ற ஏப்ரலில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 36.70 கோடி டாலராக (2,019 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 32.80 கோடி டாலராக (1,804 கோடி ரூபாய்) இருந்தது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், தோல் பொருட்கள் ஏற்றுமதி, 11.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் (சி.எல்.இ.,) தெரிவித்துள்ளது.சென்ற ஏப்ரலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, தோல் பொருட்களுக்கான ஆர்டர்கள், அதிகளவில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்துள்ளன.இதன் காரணமாகவே, நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்திலேயே இவற்றின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில், இந்திய தோல் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 20 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுவதாக, சி,எல்.இ.,யின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|