வைர ஆபரணங்கள் விலை கிடு கிடு...வைர ஆபரணங்கள் விலை கிடு கிடு... ... நுண்கடன் வழங்கியதில் தமிழகம் முதலிடம் நுண்கடன் வழங்கியதில் தமிழகம் முதலிடம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மானிய விலைசர்க்கரை: மாநில அரசகளின் கோரிக்கை நிராகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
01:30

புதுடில்லி:பொது வினியோக திட்டத்திற்கான,சர்க்கரை கொள்முதலில், மாற்று ஏற்பாடுகளை செய்ய, அவகாசம் வேண்டும் என, சில மாநில அரசகள் விடுத்த கோரிக்கையை, மத்திய அரச நிராகரித்துள்ளது.மத்திய அரச,சர்க்கரை கொள்முதல் மீதான, சில கட்டுப்பாடுகளை, கடந்த ஏப்ரல் மாதம் நீக்கியது.கொள்முதல் இதையடுத்து, வரும் ஜூன் 1ம் தேதி முதல், அந்தந்த மாநில அரசகளே, வெளிச்சந்தையில்,சர்க்கரையை கொள்முதல் செய்து, பொது வினியோக திட்டத்திற்கு வழங்க வேண்டும்.
சர்க்கரையின் வெளிச்சந்தை விலைக்கும், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும்சர்க்கரையின் விலைக்கும் உள்ள வித்தியாச தொகையை, மத்திய அரச, மாநில அரசகளுக்கு, மானியமாக வழங்கும்.

இதையடுத்து, டில்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா, கேரளா, மேற்கு வங்களம் ஆகிய ஆறு மாநிலங்கள்,சர்க்கரையை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை வெளியிட்டுள்ளன.மத்திய அரசின் திட்டம், அமலுக்கு வர இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில்,சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள், இன்னும் ஒப்பந்த புள்ளிகளை வெளியிடாமல் உள்ளன.இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும், மே மாதம் வரையில் பொது வினியோக திட்டத்திற்கானசர்க்கரை அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஜூன் மாதம் முதல், அந்தந்த மாநிலங்களே, வெளிச்சந்தையில்சர்க்கரையை கொள்முதல் செய்ய வேண்டும் என, மத்திய உணவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.எனினும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில அரசகள், போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வசதியாக, புதியசர்க்கரை கொள்முதல் திட்டம் அமலாவதை தள்ளி வைக்க வேண்டும் அல்லது மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன.இதுகுறித்து, மத்திய உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய திட்டம் குறித்து, அனைத்து மாநில அரசகளுக்கும், பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. அதனால், திட்ட அமலாக்கத்தை தள்ளி வைக்கவோ, மாற்று திட்டத்தை செயல்படுத்தவோ முடியாது' என்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர்

அதேசமயம், மாநிலங்கள், வெளிச்சந்தையில்சர்க்கரையை கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில், மானியத்தை முன்னதாகவே தருவது குறித்து, மத்திய அரச பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.இத்திட்டம், ஜம்மு - காஷ்மீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள மாநிலங்களுக்கு பயன் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு, ஒரு கிலோசர்க்கரையின் விலை, 32 ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 36 - 38 ரூபாய் வரை உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)