மும்பை சாலைகளில் பிரீமியர் பத்மினி கார்: ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு காண முடியாதுமும்பை சாலைகளில் பிரீமியர் பத்மினி கார்: ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு காண ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80  உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் : ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
11:49

புதுடில்லி: சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம், வரும், 1ம் தேதி முதல், 18 மாவட்டங்களில் மட்டும் அமலுக்கு வருகிறது. மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது: மத்திய அரசின் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை உதவியுடன், நேரடியாக, பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி, சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையும், பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளன.
முதல் கட்டமாக, வரும், 1ம் தேதி முதல், 18 மாவட்டங்களில், இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதில், புதுச்சேரியும் அடக்கம். ஏற்கனவே, 20 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தல் காரணமாக, அங்குள்ள ஒரு மாவட்டத்திலும், இமச்சால் பிரதேசத்தில் நடந்த, லோக்சபா இடைத் தேர்தல் காரணமாக, அங்குள்ள ஒரு மாவட்டத்திலும், இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.இதனால், 18 மாவட்டங்களில் மட்டும், முதல் கட்டமாக, இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும், இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். இவ்வாறு, அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு முறை சிலிண்டர் பதிவு செய்யும் போதும், அவர்களுக்கான மானிய தொகையான, 435 ரூபாய், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். சிலிண்டர் வாங்கும்போது, சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு உள்ளவர்கள் மட்டுமே, இந்த திட்டத்தில் பயன் பெற முடியும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)