பதிவு செய்த நாள்
02 ஜூன்2013
01:06
மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின், செயல் தலைவர் மற்றும் கூடுதல் இயக்குனராக, என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரில், @நற்று நடைபெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின், நிர்வாக குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பங்குதாரர்கள் :இதுகுறித்து, இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:தகவல் தொழில்நுட்பத் துறையில், நிறுவனம் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, நிர்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, நிறுவனத்தின் செயல் தலைவராகவும், கூடுதல் இயக்குனராகவும் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செயல் உதவியாளராக, இவருடைய மகன், ரோகன் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை செயல் தலைவராக உள்ள எஸ்.கோபாலகிருஷ்ணன், செயல் துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோரிக்கை:இதுவரை, இன்போசிஸ் நிறுவன நிர்வாக குழு தலைவராக இருந்த, @க.வி.காமத், அப்பொறுப்பில் இருந்து விலகி, இன்@பாசிஸ் நிர்வாக குழுவின், தலைமை இயக்குனராக செயல்படுவார்.எஸ்.டீ.சிபுலால், தொடர்ந்து நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணிபுரிவார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனருள் ஒருவரான நாராயணமூர்த்தி, கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதில் இருந்து இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமடைந்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தற்போது நாராயணமூர்த்தி, மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|