பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
13:45
ராமேஸ்வரம்:மீன்பிடி தடைக் காலத்துக்கு பின், வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிக இறால் கிடைத்துள்ளது.கடந்த ஏப்., 15 முதல் மே 29ம் தேதி வரை, மீன் இனப்பெருக்கத்திற்காக, வங்கக்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை முடிந்து, நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து, 761 விசைப்படகில், மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டாமல், கச்சதீவு அருகே மீன்பிடித்து, நேற்று காலை கரை திரும்பினர். இதில், ஒரு படகிற்கு சராசரியாக, 130 கிலோ இறால் கிடைத்தது. ஒரு கிலோ இறால், 500 முதல் 580 ரூபாய் வரை விற்றனர். மேலும், ஒரு படகிற்கு, 30 முதல் 60 கிலோ வரை, கணவாய் மற்றும் நண்டு கிடைத்தது. இதன்மூலம், ஒரு படகிற்கு சராசரியாக, 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைத்தது என, மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|