பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
17:30
மும்பை : கடந்த வெள்ளியன்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 3ம் தேதி, திங்கட்கிழமை) வாரத்தின் முதல்நாளிலும் சரிவுடனேயே முடிந்தன. 2009ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மே மாதத்துக்கான உற்பத்தி சரிவை சந்தித்ததால் எண்ணெய், ஆயில் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குசந்தைகள் இன்று சரிவிலேயே முடிந்தன. இருந்தபோதும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்ததால் இன்றைய பங்குசந்தையில் பெரும் சரிவு தவிர்க்கப்பட்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 149.82 புள்ளிகள் சரிந்து 19,610.48 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 46.65 புள்ளிகள் சரிந்து 5,939.30 எனும் அளவிலும் முடிந்தன. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு சென்செக்ஸ் 19,610.48 புள்ளிகளாக சரிவது இதுவே முதல்முறையாகும்.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில், 20 பங்குகளின் விலை சரிந்து காணப்பட்டன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா போன்ற பங்குகள் விலை சரிந்தன. அதேசமயம் இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ்க்கு மீண்டும் நாராயண மூர்த்தி வந்திருப்பது அந்த நிறுவனத்தின் பங்குவிலையை அதிகரித்தன. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் விலை 4.42 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|