பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
23:55
புதுடில்லி: சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு வாயிலாக, 41,812 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. இது, கடந்த, ஒன்பது மாதங்களில் இல்லாத, மிகவும் அதிகபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், மேற்கண்ட வகையில் திரட்டிய தொகை, 39,170 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முன்பாக, அதாவது, 2012ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட, 202 கடன்பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 57,745 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன. இதுவே, மிகவும் அதிகபட்ச தொகையாகும்.சென்ற ஏப்ரலில், இந்திய நிறுவனங்கள், 206 தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடுகள் வாயிலாக, 41,812 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன.நடப்பு, 2013ம் ஆண்டில், இது வரையிலுமாக, இவ்வகையில், திரட்டி கொண்ட தொகை, 1.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|