பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
23:55
புதுடில்லி: புதிய ஆர்டர்கள் கிடைக்காதது மற்றும் மின் பற்றாக் குறையால், சென்ற மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த 50 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் சரிவடைந்துள்ளது என, எச்.எஸ்.பீ.சி.,யின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற மே மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி குறியீட்டு எண், 50.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 51 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதற்கு முன், கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான், தயாரிப்பு துறை உற்பத்தி குறியீட்டு எண், மிகவும் வீழ்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு துறை மிகவும் சுணக்கமாக இருந்தது. உள்நாட்டிலிருந்து, போதுமான அளவிற்கு ஆர்டர்கள் கிடைக்காததால், இத்துறையின் உற்பத்தி சரிவடைந்து உள்ளது.மேலும், மின் தடை பிரச்னையும், உற்பத்திக்கு மிகப் பெரும் இடர்பாடு அளிப்பதாக உள்ளது என, எச்.எஸ். பீ.சி.,யின் தலைமை பொருளாதார வல்லுனர் (இந்தியா மற்றும் ஆசியான்) லீப் எஸ்கிஷன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|