பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
23:56
புதுடில்லி :இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 459 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 737 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. இவை, கடந்த மாதத்தில், முறையே, 440 டாலர் மற்றும் 761 டாலராக இருந்தன.சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னியச் செலாவணிகளின் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப, மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றின் மதிப்பை மாற்றி அமைத்து வருகிறது. இதன் அடிப்படையில் தான் சுங்கவரி விதிக்கப்படுகிறது.இதன்படி, இறக்குமதியாகும் ஒரு டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மதிப்பு, 836 டாலரிலிருந்து, 854 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, இறக்குமதி செய்யப்படும், ஒரு டன் கச்சா பாமாயில் மதிப்பும், 831 டாலரிலிருந்து, 843 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், இறக்குமதியாகும், ஒரு டன் கச்சா சோயா எண்ணெய் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி, 1,075 டாலர் என்ற அளவிலேயே உள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான, மூன்று மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 300-400 டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 153 டன்னாக இருந்தது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|