பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
23:57
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற மே மாதத்தில், 3.65 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.இந்நிலையில், இந்நிறுவனம், அம்மாதத்தில், 3.45 கோடி டன் அளவிற்கே, நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது.இதே மாதத்தில், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனை, 3.82 கோடி டன்னாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனம், அம்மாதத்தில், 4.09 கோடி டன் நிலக்கரி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில், இந்நிறுவனம், 7.16 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 7.03 கோடி டன் அளவிற்கே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை, 7.80 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இருப்பினும், இது, விற்பனை இலக்கு அளவான, 8.09 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 46.40 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.இருப்பினும், இந்நிறுவனத்தின் உற்பத்தி, 45.20 கோடி டன் அளவிற்கே இருந்தது. மேலும், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனை, 46.50 கோடி டன்னாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், கோல் இந்தியாவின், உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கு முறையே, 48.20 கோடி டன் மற்றும் 49.20 கோடி டன் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|