"ஏசி' சாதனங்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும்"ஏசி' சாதனங்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிக்கும் ... சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 97,546 டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 97,546 டன் ...
அலைபேசியில் பணப்பட்டுவாடா 72,100 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
23:38

மும்பை:வரும் 2017ம் ஆண்டிற்குள், உலக அளவில், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, 72,100 கோடி டாலராக (39.66 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, கடந்த 2012ம் ஆண்டில், 16,310 கோடி டாலராக (8.97 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயன்பாடு:உலகளவில், அலைபேசி பயன்பாடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, "ஸ்மார்ட் போன்' களின் விற்பனை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், இவற்றின் வாயி லான, பணப்பரிவர்த்தனை, 44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 16,310 கோடி டாலரிலிருந்து, 23,540 கோடி டாலராக அதிக ரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 2017ம் ஆண்டிற்குள், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, சர்வ தேச அளவில், 72,100 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், சென்ற 2012ம் ஆண்டில், அலைபேசி மூலமான, பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை, 20.08 கோடியாக இருந் தது. இந்த எண்ணிக்கை, நடப்பாண்டில், 24.52 கோடியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2012-17ம் ஆண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், சர்வதேச அளவில், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, ஆண்டுக்கு 35 சதவீதம் வளர்ச்சி கண்டு முறையே, 45 கோடி மற்றும் 72,100 கோடி டாலராக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுவதாக, கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சான்டி சென் தெரிவித்தார்.
பரிவர்த்தனை:நடப்பு 2013ம் ஆண்டின், அலைபேசி வாயிலான மொத்த பணப் பரிவர்த்தனையில், பணம் அனுப்புதல், 71 சதவீதமாகவும், பொருட்களை வாங்குவது, 21 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு 2013 ம் ஆண்டில், ஆசிய பசிபிக் நாடுகளின், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, 38 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,400 கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது தவிர, நடப்பாண்டு, அலைபேசி வாயிலான பணப் பட்டுவாடாவில், வட அமெரிக்கா, 53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,700 கோடி டாலராக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இது, சென்ற 2012ம் ஆண்டில் 2,400 கோடி டாலராக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)