பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:38
மும்பை:வரும் 2017ம் ஆண்டிற்குள், உலக அளவில், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, 72,100 கோடி டாலராக (39.66 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, கடந்த 2012ம் ஆண்டில், 16,310 கோடி டாலராக (8.97 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயன்பாடு:உலகளவில், அலைபேசி பயன்பாடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, "ஸ்மார்ட் போன்' களின் விற்பனை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், இவற்றின் வாயி லான, பணப்பரிவர்த்தனை, 44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 16,310 கோடி டாலரிலிருந்து, 23,540 கோடி டாலராக அதிக ரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 2017ம் ஆண்டிற்குள், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, சர்வ தேச அளவில், 72,100 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், சென்ற 2012ம் ஆண்டில், அலைபேசி மூலமான, பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை, 20.08 கோடியாக இருந் தது. இந்த எண்ணிக்கை, நடப்பாண்டில், 24.52 கோடியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2012-17ம் ஆண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், சர்வதேச அளவில், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, ஆண்டுக்கு 35 சதவீதம் வளர்ச்சி கண்டு முறையே, 45 கோடி மற்றும் 72,100 கோடி டாலராக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுவதாக, கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சான்டி சென் தெரிவித்தார்.
பரிவர்த்தனை:நடப்பு 2013ம் ஆண்டின், அலைபேசி வாயிலான மொத்த பணப் பரிவர்த்தனையில், பணம் அனுப்புதல், 71 சதவீதமாகவும், பொருட்களை வாங்குவது, 21 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு 2013 ம் ஆண்டில், ஆசிய பசிபிக் நாடுகளின், அலைபேசி வாயிலான பணப்பரிவர்த்தனை, 38 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,400 கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது தவிர, நடப்பாண்டு, அலைபேசி வாயிலான பணப் பட்டுவாடாவில், வட அமெரிக்கா, 53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,700 கோடி டாலராக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இது, சென்ற 2012ம் ஆண்டில் 2,400 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|