அலைபேசியில் பணப்பட்டுவாடா 72,100 கோடி டாலராக உயரும்அலைபேசியில் பணப்பட்டுவாடா 72,100 கோடி டாலராக உயரும் ... வரத்து அதிகரித்தது:மாங்காய் விலை சரிவு வரத்து அதிகரித்தது:மாங்காய் விலை சரிவு ...
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 97,546 டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
23:42

புதுடில்லி:நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற மே மாதத்தில், 97,546 டன்னாக சரிவடைந்துள்ளது என, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், ஈரான் நாடு, இந்தியாவிலிருந்து, மிகவும் அதிக பட்சமாக, 83,239 டன் சோயா புண்ணாக்கை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதுகுறித்து சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பின் ஒருங் கிணைப் பாளர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: சர்வதேச அளவில், சோயா புண்ணாக்கிற்கான தேவை மிகவும் சரிவடைந்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 97,546 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1.39 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 29.74 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும், உள்நாட்டில் சோயா வரத்தும் குறைந்து போய் உள்ளது. இதனால், சோயா புண்ணாக்கு உற்பத்தியும் குறைந்து போயுள்ளது.நடப்பு 2012-13ம் எண்ணெய் சந்தைப் படுத்தும் பருவத்தின் (அக்., - செப்.,), முதல் எட்டு மாத காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 14 சதவீதம் சரிவடைந்து, 27.95 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 32.61 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, மதிப்பீட்டு காலத்தில், ஈரான் நாடு, 5.44 லட்சம் டன் சோயா புண்ணாக்கை இந்தியாவிலிருந்து, இறக்குமதி செய்து கொண்டுள்ளது.இவ்வாறு ராஜேஷ் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)