பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
23:42
புதுடில்லி:நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற மே மாதத்தில், 97,546 டன்னாக சரிவடைந்துள்ளது என, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், ஈரான் நாடு, இந்தியாவிலிருந்து, மிகவும் அதிக பட்சமாக, 83,239 டன் சோயா புண்ணாக்கை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதுகுறித்து சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பின் ஒருங் கிணைப் பாளர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: சர்வதேச அளவில், சோயா புண்ணாக்கிற்கான தேவை மிகவும் சரிவடைந்துள்ளது. இதையடுத்து, நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 97,546 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1.39 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 29.74 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும், உள்நாட்டில் சோயா வரத்தும் குறைந்து போய் உள்ளது. இதனால், சோயா புண்ணாக்கு உற்பத்தியும் குறைந்து போயுள்ளது.நடப்பு 2012-13ம் எண்ணெய் சந்தைப் படுத்தும் பருவத்தின் (அக்., - செப்.,), முதல் எட்டு மாத காலத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 14 சதவீதம் சரிவடைந்து, 27.95 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 32.61 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, மதிப்பீட்டு காலத்தில், ஈரான் நாடு, 5.44 லட்சம் டன் சோயா புண்ணாக்கை இந்தியாவிலிருந்து, இறக்குமதி செய்து கொண்டுள்ளது.இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|