பதிவு செய்த நாள்
05 ஜூன்2013
09:21
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.15 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.36 புள்ளிகள் குறைந்து 19532.42 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.15 புள்ளிகள் குறைந்து 5908.30 புள்ளிகளோடு காணப் பட்டது. பங்கு வியாபாரம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.33 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளின் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க வில்லை. நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், மருந்து, மின்சாரம், பொறியியல் பொருட்கள் ஆகிய துறைக ளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|