பதிவு செய்த நாள்
05 ஜூன்2013
23:47
மும்பை:அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கு நிகரான ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.சென்ற மே மாதம், 30ம் தேதி, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 54.32 ஆக இருந்தது. அதன் பின்னர், கடந்த 10 வாரங்களில் இல்லாத அளவாக, ரூபாயின் வெளி மதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், ரூபாயின் மதிப்பு, ஓரளவு கட்டுக்குள் இருந்தது. அன்றைய அன்னிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு, 56.44 ஆக இருந்தது.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கையால், ரூபாய் மதிப்பின் சரிவு ஓரளவு தடுக்கப் பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று மீண்டும் ரூபாய் மதிப்பு, 0.28 காசுகள் குறைந்து, 56.72 ஆக சரிவடைந்தது.மத்திய அரசு, தேசிய கடன் பத்திரங்களில், அன்னிய முதலீட்டிற்கான உச்ச வரம்பை மேலும் உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி, தங்கத்தின் மீது மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது போன்ற நடவடிக்கைகளால், டாலர் புழக்கம் அதிகரித்து, சரிந்து வரும் ரூபாய் மதிப்பு கட்டுக்குள் வரும் என, தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|