தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ... நாட்டின் தங்கம் இறக்குமதி1,500 கோடி டாலராக உயர்வு நாட்டின் தங்கம் இறக்குமதி1,500 கோடி டாலராக உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முன்னணி நிறுவனங்கள் அதிக டிவிடெண்டு அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
23:51

மும்பை:கடந்த 2012-13ம் நிதியாண்டில், பல முன்னணி நிறுவனங்கள் ஈட்டும் லாபம் குறைந்துள்ளது. இந்நிலையிலும், அந்நிறுவனங்கள், அதன் பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ள டிவிடெண்டு தொகை, முந்தைய நிதிஆண்டை காட்டிலும் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
"சென்செக்ஸ்' :மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இதுவரையில், 29 நிறுவனங்கள், சென்ற முழு நிதி ஆண்டிற்கான, டிவிடெண்டு தொகையை அறிவித்துள்ளன.இதில், 17 நிறுவனங்கள், அறிவித்துள்ள டிவிடெண்டு, முந்தைய நிதியாண்டை காட்டிலும், சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், சென்ற 2012-13ம் நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு, 60 ரூபாயை டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 45 ரூபாயாக இருந்தது.ஹீரோ மோட்டோகார்ப், ஐ.டி.சி., ஆகிய நிறுவனங்கள், அவை ஈட்டிய லாபத்தில், பாதிக்கும் மேற்பட்ட தொகையை, அவற்றின் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, சென்ற நிதிஆண்டிற்கு, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், அதன் பங்கு தாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு, 18.50 ரூபாயை டிவிடெண்டாக வழங்கியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதிஆண்டில், 7.50 ரூபாயாக மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆக, இந் நிறுவனம், சென்றநிதியாண்டில் வழங்கிய டிவிடெண்டு, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:சென்ற நிதியாண்டில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பங்கு ஒன்றிற்கு, 41.50 ரூபாயை டிவிடெண்டாக வழங்கியுள்ளது. முந்தைய 2011-12ம் நிதியாண் டில், இவ்வங்கி, அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு, 35 ரூபாயை டிவிடெண்டாக வழங்கியது.இதே போன்று, பங்கு ஒன்றிற்கு, கோல் இந்தியா வழங்கிய டிவிடெண்டு, 10 ரூபாயிலிருந்து, 14 ரூபாயாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் வழங்கிய டிவிடெண்டு, 16.50 ரூபாயிலிருந்து, 20 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.
இலவச பங்குகள் :மேலும், என்.டி.பி.சி., நிறுவனம் அறிவித்த டிவிடெண்டு, 4 ரூபாயி லிருந்து, 7 ரூபாயாகவும், எல் அண்டு டி வழங்கிய டிவிடெண்டு, 16.50 ரூபாயிலிருந்து, 18 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.எல் அண்டு டி நிறுவனம், பவள விழாவை முன்னிட்டு, அதன் பங்குதாரர்களுக்கு, இரண்டு பழைய பங்குகளுக்கு, ஒரு புதிய பங்கு என்ற விகிதத்தில், இலவசப் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.இதே போன்று, சன்பார்மா நிறுவனம், 200 கோடி டாலர் வருவாய் ஈட்டியதை கொண்டாடும் வகையில், ஒரு பழைய பங்கிற்கு, ஒரு புதிய பங்கு என்ற விகிதத்தில் இலவசப் பங்குகளை அறிவித்துள்ளது.
அதேசமயம், சென்ற நிதிஆண்டில், இன்போசிஸ் உள்ளிட்ட, 8 நிறுவனங்கள் வழங்கிய டிவிடெண்டு, இதற்கு முந்தைய நிதியாண்டை காட்டிலும் குறைந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இன்போசிஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு, 47 ரூபாயை டிவிடெண்டாக வழங்கியிருந்த நிலை யில், சென்ற நிதியாண்டிற்கு, இந் நிறுவனம், 42 ரூபாயை மட்டுமே, டிவிடெண்டாக அறிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ :இதே போன்று, பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், ஓ.என்.ஜி.சி., மற்றும் டாட்டா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள், வழங்கிய டிவிடெண்டு தொகை, 12 ரூபாயிலிருந்து, 8 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.அதேசமயம், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், சிப்லா, ஜிந்தால் ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய டிவிடெண்டு தொகை, மாற்றம் எதுவுமின்றி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)