பதிவு செய்த நாள்
05 ஜூன்2013
23:59
மும்பை:அன்னிய வங்கிகள், இந்தியாவில் துணை வங்கிகளை அமைக்க அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகள், அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அன்னிய வங்கிகள் தொடர்பான, ஒரு சில சட்டப் பிரச்னைகளும், வரி விவகாரங்களும் உள்ளன. இவற்றுக்கு அடுத்த சில மாதங்களில் தீர்வு காணப்பட்டு விடும். அதன் பின்னர், வெளிநாட்டு வங்கிகள், இந்தியாவில் துணை வங்கிகளை அமைக்க, உரிமம் வழங்குவது தொடர்பான இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும்.தற்போது, 43 அயல்நாட்டு வங்கிகள், இந்தியாவில் கிளைகளை மட்டுமே கொண்டுள்ளன. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க், எச்.எஸ்.பீ.சி., சிட்டி பேங்க் ஆகிய அன்னிய வங்கிகள் மட்டுமே, 30க்கு மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளன. 31 கிளைகளை கொண்டுள்ள, ஆர்.பீ.எஸ்., அதன் சில்லரை வணிகத்தை நிறுத்த உள்ளது.
வெளிநாட்டு வங்கிகள், உள்நாட்டு வங்கி சட்ட விதிமுறைகளின் கீழ் துணை வங்கிகளை அமைத்தால், அவற் றுக்கு முத்திரை தீர்வு விலக்கு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மேலும், இந்திய வங்கிகளுக்கு நிகராக, அனைத்து சேவைகளிலும் போட்டி போட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|