பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
00:04
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதிஆண்டின், முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே), நாட்டின் தங்கம் இறக்குமதி, 1,500 கோடி டாலரை (82,500 கோடி ரூபாய்) எட்டியுள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
பற்றாக்குறை:நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், தங்கம் இறக்குமதி உயர்ந்துள்ளது இடர்பாடு அளிப்பதாக உள்ளது.இதையடுத்து, நாட்டின் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 750 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த, 2012ம் ஆண்டு இதே மாதத்தில், 310 கோடி டாலராக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இவற்றின் இறக்குமதி மதிப்பு, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து உள்ளது.தங்கம் இறக்குமதியில், இதே நிலை தொடரும் பட்சத்தில், நடப்பு நிதிஆண்டின் முடிவில், இதன் இறக்குமதி, சாதனை அளவாக, 9,000 கோடி டாலரை (4.95 லட்சம் கோடி ரூபாய்) எட்டிவிடும் என, சர்மா மேலும் தெரிவித்தார்.
மதிப்பீடு:சென்ற ஏப்ரலில், இந்தியா, 162 டன் தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்), இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 300-400 டன்னாக இருக்கும் என, உலக தங்க கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|