பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
11:47
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் இடத்தில் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏராளமான தங்கத்தினை இந்திய இறக்குமதி செய்து வருகிறது. நடப்பு 2013-14ம் நிதிஆண்டின், முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே), நாட்டின் தங்கம் இறக்குமதி, 1,500 கோடி டாலரை (82,500 கோடி ரூபாய்) எட்டியுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனையடுத்து தங்கத்தின் விலை உயரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றே சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது.
சென்னை தங்கமார்க்கெட்டில் இன்று(ஜூன் 6ம் தேதி, வியாழக்கிழமை) மாலைநேர நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2603க்கும், சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.20,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.570 அதிகரித்து 27,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் வெள்ளியின் விலை 10காசு உயர்ந்து ரூ.47.50-க்கும் பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.44,410-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|