பதிவு செய்த நாள்
06 ஜூன்2013
14:49
மும்பை : தங்கத்தில் முதலீடு செய்ய வலியுறுத்த வேண்டாம் என்று வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் வி்டுத்துள்ளார். மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது, நாட்டின் நிதிப்பற்றாக்குறை அளவு கவலை அளிக்கும் விதமாக இல்லை. 1.3 சதவீத அளவிலான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையி்ல், வட்டி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும்.
உணவு பணவீக்கம் தற்போது கவலை அளிக்கும் நிலையிலேயே உள்ளது. ஆனால் விரைவில் ராபி பருவ அறுவடை வர இருப்பதால், உணவு பணவீக்கம் விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதமொன்றிற்கு 152 டன்கள் அளவில் தங்கத்தை இறக்குமதி செய்வது என்பது இயலாத காரியம் என்றும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், மேலும் பல புதிய வங்கிகளை துவங்க உரிமம் வழங்கப்படும், ரூபாய் மதிப்பின் சரிவு குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|