பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:12
புதுடில்லி:உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், கூர்கான் மற்றும் மானேசர் தொழிற் பிரிவுகள், இன்று மூடப்படுகின்றன. இதனால், இப்பிரிவுகளில், 5,000 வாகனங்களின் உற்பத்தி குறையும்.
வழக்கமான விடுமுறை என்பதால், நாளையும், இத்தொழிற் பிரிவுகள் மூடப்பட்டிருக்கும் என, மாருதி சுசூகி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இது தவிர, பராமரிப்பு பணிகளுக்காக, மேற்கண்ட இரு பிரிவுகளும், வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான, ஆறு நாட்களும் மூடப்படும் என, அவர் மேலும் கூறினார்.
நாட்டின் வாகனத் துறை மந்த நிலையில் உள்ளதால், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனை, சென்ற மே மாதம், 14.4 சதவீதம் சரிவடைந்து, 88,677 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், இந்நிறுவனத்தின், உள்நாட்டு வாகன விற்பனை, 13 சதவீதம் குறைந்து, 89,478 என்ற எண்ணிக்கையில் இருந்து, 77,821 ஆக சரிவடைந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம், நாளை, அதன் ஒரு நாள் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|