பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:13
சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் பேங்க், அதன் சில்லரை கடன் வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, வீடு மற்றும் வாகன கடனுக்கு தலா, 10.25 சதவீத வட்டியில், நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், இக்கடன்களுக்கு சிறப்பு சலுகையாக, பரிசீலனை கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், வியாபாரம் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும், சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மழை கால சிறப்பு கடன் சலுகை திட்டம் என்ற பெயரில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள
இத்திட்டம், ஜூன் 1ம் தேதி முதல், செப்டம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.இந்த சிறப்பு திட்டத்தின் வாயிலாக, 350 கோடி ரூபாய் அளவிற்கு சில்லரைக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, இவ்வங்கியின் துணை பொது மேலாளர் பி.வி.சந்திரசேகரன் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|