பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:16
மும்பை:கடந்த ஒரு சில வாரங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்துள்ளது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்திற்கு இடையே, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 57 ஆக சரிவடைந்துள்ளது. கடந்த எட்டு தினங்களில், ரூபாயின் மதிப்பு, 150 காசுகள் வீழ்ச்சி கண்டுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு, 56.89லிருந்து, 57 வரை சென்று, வர்த்தகம் முடியும் போது, 56.85ல் நிலை பெற்றது.வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் அதிகளவில் டாலரை வாங்கியதால், ரூபாயின் மதிப்பு சரிவடைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், அன்னியச் செலாவணி வரத்து, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. அன்னிய முதலீட்டை பெறும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. எனவே, அடுத்த ஒரு சில வாரங்களில், ரூபாயின் மதிப்பு உயரத் துவங்கும்.எனவே, இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|