பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
14:11
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 24 சதவீதம் அதிரித்துள்ளது. மே மாதத்துக்கான டிராக்டர் விற்பனையில் அந்த நிறுவனத்தின் டிராக்டர் 23,626 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேமாதம் அந்நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 19,016 ஆக இருந்தது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் விற்பனை 24.24 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக டிராக்டரின் விற்பனை அதிகரித்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தாண்டு விவசாயிகளுக்கு பருவமழை நன்றாக கைகொடுக்கும் பட்சத்தில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் டிராக்டர் ஏற்றுமதியும் மே மாதத்தில் 15.84 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேமாதத்தில் 997 ஆக இருந்த டிராக்டர் ஏற்றுமதி, இந்தாண்டு 1,155 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|