பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
16:42
சென்னை : தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இருதினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நேற்று முன்தினம் தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனையடுத்து தங்கம் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று(ஜூன் 6ம் தேதி) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. தொடர்ந்து இன்றும்(ஜூன் 7ம்தேதி) தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னை தங்கம் மார்க்கெட் சந்தையில் இன்று(ஜூன் 7ம் தேதி, வெள்ளிக்கிழமை) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,630-க்கும், சவரன் ரூ.21,040-க்கும், 24காரட் 10கிராம் தங்கம் விலை ரூ.28,125-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்து ரூ.48.10-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.44,955-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|