பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
17:06
மும்பை : வாரத்தின் இறுதிநாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. சென்செக்ஸ் 90 புள்ளிகளும், நிப்டி 40 புள்ளிகளும் சரிந்தன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.57-ஐ தொட்டுள்ளது.
ஜூன் முதல்வாரம்(இந்தவாரம்) பங்குவர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. வாரத்தின் துவக்கத்தில் சரிவுடன் துவங்கிய பங்குசந்தைகள் இடையில் 192 புள்ளிகள் உயர்வு பெற்றன. ஆனபோதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர் வீழ்ச்சி, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு போன்ற காரங்களால் இந்திய பங்குசந்தைகளும் தொடர்ந்து சரிந்து வார இறுதிநாளிலும் சரிவிலேயே முடிந்துள்ளன.
வாரத்தின் இறுதிநாளான இன்று(ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை) வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 90.26 புள்ளிகள் சரிந்து 19,429.23 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 40.40 புள்ளிகள் சரிந்து 5,881 எனும் அளவிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் பார்த்தி ஏர்டெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி உள்ளிட்ட 22 நிறுவன பங்குகள் விலை சரிந்து காணப்பட்டன. குறிப்பாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.57-ஐ தொட்டுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. தங்களது தொழிலுக்கு தேவையான ஸ்பேர்பார்ட்ஸ்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அந்த நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகள் விலை சரிவில் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|