ஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வுஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு ... நாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவு நாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்தன!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
17:06

மும்பை : வாரத்தின் இறுதிநாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. சென்செக்ஸ் 90 புள்ளிகளும், நிப்டி 40 புள்ளிகளும் சரிந்தன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.57-ஐ தொட்டுள்ளது.

ஜூன் முதல்வாரம்(இந்தவாரம்) பங்குவர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. வாரத்தின் துவக்கத்தில் சரிவுடன் துவங்கிய பங்குசந்தைகள் இடையில் 192 புள்ளிகள் உயர்வு பெற்றன. ஆனபோதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர் வீழ்ச்சி, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு போன்ற காரங்களால் இந்திய பங்குசந்தைகளும் ‌தொடர்ந்து சரிந்து வார இறுதிநாளிலும் சரிவிலேயே முடிந்துள்ளன.

வாரத்தின் இறுதிநாளான இன்று(ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை) வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 90.26 புள்ளிகள் சரிந்து 19,429.23 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 40.40 புள்ளிகள் சரிந்து 5,881 எனும் அளவிலும் முடிந்தன.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் பார்த்தி ஏர்டெல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி உள்ளிட்ட 22 நிறுவன பங்குகள் விலை சரிந்து காணப்பட்டன. குறிப்பாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.57-ஐ தொட்டுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. தங்களது தொழிலுக்கு தேவையான ஸ்பேர்பார்ட்ஸ்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அந்த நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகள் விலை சரிவில் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)