பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
00:05
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்,நாட்டின் உருக்கு பயன்பாடு, 1.17 கோடி டன்னாக சரி வடைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதேமாதத்தில், 1.18 கோடி டன்னாக இருந்தது.
ஆக, மதிபீட்டு மாதத்தில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 0.8 சதவீதம் சரிவடைந்துள்ளது என,மத்திய உருக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 1.30 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத் தியை (1.26 கோடி டன்) காட்டிலும், 3.1சதவீதம் அதிகமாகும். செயில் மற்றும் டாட்டா ஸ்டீல், நிறுவனங் களின் உருக்கு உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியகாரணமாகும்.
சென்ற ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 41.2 சதவீதம்சரிவடைந்து, 8.90 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதங்களில், 15.20 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், உருக்கு ஏற்றுமதி, 28.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8.40 லட்சம் டன்னாக உயர்ந்துள் ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|