பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
00:12
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததை அடுத்து, "சென்செக்ஸ்', 0.46 சதவீதசரிவுடன் முடிவடைந்தது.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதன் தாக்கம்,இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.அம்பானி சகோதர நிறுவனங்களுக்கிடையில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 90.26 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,429.23 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,711.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,397.51 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், மகிந்திராஉள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., விப்ரோ உள்ளிட்ட,8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 40.40புள்ளிகள் சரிவடைந்து, 5,881 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,972.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,871.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|