பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
14:01
புதுடில்லி : அடுத்த ஒன்பது ஆண்டுகளில் பருத்தி உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உலகளவில் பருத்தி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. இந்நிலையில் 2022ம் ஆண்டில் சீனாவின் பருத்தி உற்பத்தி 17 சதவீதம் சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவின் பருத்தி உற்பத்தில் 25 சதவீதம் கூடும் என தெரிகிறது. இதனால் இந்தியா முதலிடத்திற்கு வரும் என பொருளாதார ஒத்துழைப்பு–மேம்பாடு மற்றும் உணவு–வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த ஒன்பது ஆண்டுகளில் உலக பருத்தி உற்பத்தி ஆண்டுக்கு 1.6 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 2022–ஆண்டில் மொத்தம் 2.72 கோடி டன் பருத்தி உற்பத்தி செய்யப்படும். அத்துடன் கையிருப்பும் அதிகமாக இருக்கும் என்பதால் சர்வதேச சந்தையில் பருத்தி விலை கணிசமாக குறையும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|