துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 2.74 சதவீதம் சரிவு:ஏப்ரல் - மே இரு மாத காலத்தில்..துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 2.74 சதவீதம் சரிவு:ஏப்ரல் - மே இரு மாத காலத்தில்.. ... நாட்டின் நிகர நேரடி வரி வசூல்:ரூ.37,596 கோடியாக உயர்வு நாட்டின் நிகர நேரடி வரி வசூல்:ரூ.37,596 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பருத்தி உற்பத்தி: சீனாவை விஞ்சும் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:29

புதுடில்லி:பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ள சீனாவை, அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியா பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்ஏஓ) தெரிவித்துள்ளது.பயிரிடும் பரப்பளவு வரும் ஆண்டுகளில், சீனாவில், பருத்தி பயிரிடும் பரப்பளவு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அடுத்த பத்து ஆண்டுகளில், சீனாவில் இதன் உற்பத்தி, 17 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில், பருத்தி உற்பத்தி, 25 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளில், சீனாவை காட்டிலும், இந்திய ஜவுளி துறை, சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில், பருத்தி பயன்பாடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண் அமைச்சகம் :இந்நிலையில், நடப்பு 2012-13ம் பருவத்தில் (ஜூலை -ஜூன்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 338 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.வரும் 2022ம் ஆண்டில், உலக அளவில், பருத்தி பயன்பாடு, 1.7 சதவீதம் உயர்ந்து, 2.72 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இதன் உற்பத்தி, ஆண்டுக்கு, 1.6 சதவீதம் என்ற அளவில் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)