பதிவு செய்த நாள்
10 ஜூன்2013
12:45
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் அவக்காடா (பட்டர் ப்ரூட்) கோடை சீசன் துவங்கியுள்ளது. வழக்கமாக, மே மாதத்தில் கோடை சீசன் துவங்கும். மலைப்பயிர்களில் போதிய முக்கியத்துவம் அளிக்காமல், ஊடுபயிராக வலம் வந்த பட்டர் ப்ரூட் என்று அழைக்கப்படும் அவக்கடா இன்று முக்கிய பயிராகவும், விவசாயிகளிடையே எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
கொழுப்பு சத்து நிறைந்த இப்பழம் ஜூஸ், ஐஸ்கிரீம் தயாரிக்கவும், பேசியல் கிரீம், சோப்பு உள்ளிட்டவைகளுக்கு மூலப்பொருட்களாகவும், பயன்படுத்துவதால், மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கிறது. இவை பெரும்பகுதி கேரளா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நல்ல விலை மற்றும் பராமரிப்பு குறைவு என்பதால், விவசாயிகள் இதன் பரப்பை அதிகரித்துள்ளனர். தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கடந்தாண்டு தரத்திற்கு தகுந்தாற்போல் கிலோ ரூ.50 வரை விற்றது. தற்போது, கிலோ ரூ.25 வரை தோட்டங்களிலே நேரடியாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்த்து மகசூல் பாதித்த நிலையில், விலை உயர்வை எதிர்பார்த்தோம். இருந்தப் போதிலும், கடந்தாண்டை காட்டிலும் விலை சரிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது, என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|