ஆபரண தங்கம் விலைசவரனுக்கு 152 ரூபாய் உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு 152 ரூபாய் உயர்வு ... தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் உயர்வு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் உயர்வு ...
நிறுவனங்களின் ஐ.டி., செலவினம் 4,500 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
00:29

புதுடில்லி: இந்தியாவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள், வரும் 2014ம் ஆண்டில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத்திற்காக, 4,480 கோடி டாலர் அளவிற்கு செலவிடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.முதலீடுஇதுகுறித்து, ஆய்வு நிறுவனமான ஐ.டீ.சி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:கடந்த, 2012ம் ஆண்டு முதல் வரும், 2014ம் ஆண்டு வரை, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செலவினம், 1,000 கோடி டாலர் அதிகரிக்கும். குறிப்பிட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீடு குறித்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், ஐ.டி., செலவினம் உயர்ந்து வருகிறது.குறிப்பிடத்தக்க அளவிற்கு பெருகி வரும் சந்தை வாய்ப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், உயர் நடுத்தர வருவாயினருக்கான சந்தை வளர்ச்சி, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு துறைகளின் எழுச்சி ஆகிய மூன்று பிரிவுகள், வேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன."கிளவுட் கம்ப்யூட்டிங்' போன்ற மென்பொருள் பயன்பாடு, டேப்லெட் உள்ளிட்ட, பல வகை சாதனங்களுக்கு பெருகி வரும் வரவேற்பு போன்றவற்றால், நிறுவனங்கள் மட்டுமின்றி, தனிநபர்களும், ஐ.டி., வசதிக்காக செலவிடுவது அதிகரித்து உள்ளது.செயல்பாடுஅரசு துறைகளும், முழு வீச்சில் கம்ப்யூட்டர் சார்ந்த ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதால், ஐ.டி., துறைக்காக செலவிடுவது தொடரும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)