கறிக்கோழி விலை கடும் உயர்வுகறிக்கோழி விலை கடும் உயர்வு ... ரூபாய் மதிப்பிலான வீழ்ச்சி தற்காலிகமானது - மத்திய நிதி அமைச்சகம் ரூபாய் மதிப்பிலான வீழ்ச்சி தற்காலிகமானது - மத்திய நிதி அமைச்சகம் ...
உள்நாட்டு விமானங்களில் இலவச உணவை நிறுத்திவிட ஏர் - இந்தியா தீவிர ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
14:22

புதுடில்லி: குறைந்த பயண நேரம் கொண்ட, உள்நாட்டு விமானங்களில், இலவசமாக உணவு வழங்குவதை நிறுத்திவிட, ஏர் - இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையின் போது, பயணிகளுக்கு உணவு வழங்குவதை, சில தனியார் விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. பணம் செலுத்தும் பயணிகளுக்கு மட்டும் உணவு வழங்கி வந்தது. ஆனால், ஏர் - இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்களில், உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், 90 நிமிடங்களுக்கும் குறைவாக பயண நேரமுள்ள, உள்நாட்டு விமானங்களில், இலவச உணவு வழங்குவதை நிறுத்தியது. விமான எரிபொருள் செலவு அதிகரிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளால், ஏர் இந்தியா நிறுவனம், பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நாடு விமான சேவையின் போது, ஒரு மணி நேரத்திற்கு குறைவான பயண நேரமுள்ள விமானங்களில் இனிமேல் தண்ணீர் பாட்டில்கள் கூட கிடைக்காது. அந்த வகையில், எவ்வித உணவு பொருட்களும் வழங்குவதில்லை என்று முடிவு எடுக்க உள்ளது. இருப்பினும், இந்த முடிவு ஆலோசனை நிலையில் உள்ளதாகவும், தீவிரமாக அமல்படுத்துவது பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என, ஏர் - இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)