ரூபாய் மதிப்பிலான வீழ்ச்சி தற்காலிகமானது - மத்திய நிதி அமைச்சகம்ரூபாய் மதிப்பிலான வீழ்ச்சி தற்காலிகமானது - மத்திய நிதி அமைச்சகம் ... நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.11 ஆயிரம் கோடி : சென்ற நிதியாண்டில் புதிய சாதனை... நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.11 ஆயிரம் கோடி : சென்ற நிதியாண்டில் புதிய சாதனை... ...
ஆபரண தங்கம் விலை மேலும் விறு விறு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2013
00:01

சென்னை: நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் உயர்ந்து, 20,888 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து விறு விறுப்புடன் உயர்ந்து வருகிறது.
தங்கம் இறக்குமதிக்கு, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதும், இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம் தங்கம், 2,608 ரூபாய்க்கும், 1 சவரன், 20,864 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்தத் தங்கம், 27,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 2,611 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 20,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 35 ரூபாய் உயர்ந்து, 27,925 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை மிகவும் குறைந்திருந்தது. அந்த நிலை மீண்டும் திரும்ப, அதிக வாய்ப்பில்லை. தங்கம் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு அதிக தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவது பொருளாதாரத்தின் பலவீனத்தை காட்டுவதாகும்.மேலும், பணவீக்க உயர்வு, ஏற்றுமதி அளவு குறைவு ஆகியவை நமது பொருளாதாரத்திற்கு இடைஞ்சல் தரும் அம்சங்கள். இந்த நிலையில் தங்கம் விலை முன்புபோல அதிரடி வீழ்ச்சி காண வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)