பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
00:03

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவாக, 58.96 ஆக சரிவடைந்தது மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், வர்த்தகத்தின் முடிவில், "சென்செக்ஸ்', 1.53 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, உலோகம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 298.07 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,143 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,418.74 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,121.18 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஜிந்தால் ஸ்டீல், ஹிண்டால்கோ, டாட்டா பவர் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சிப்லா, விப்ரோ உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 89.20 புள்ளிகள் சரிவடைந்து, 5,788.80 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,868.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,780.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|