பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
10:38
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு தினங்களாக பெரும் சரிவை சந்தித்து ரூ.58-ஐ தொட்டுள்ளது. நேற்று(ஜூன் 11ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.39 ஆக முடிந்த நிலையில் இன்று(ஜூன் 12ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.58.20-ஆக உள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்பட்டாலும் தொடர்ந்து ரூ.58-லேயே நீடிப்பது முதலீட்டாளர்களுக்கு கவலை அளித்துள்ளது. ஆனாபோதும் இது தற்காலிகம் தான் என நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|