பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
17:05
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது, மே மாதத்துக்கான சில்லரை வர்த்தக பணவீக்கம் குறைந்தது மற்றும் மெட்டல், நுகர்பொருள் தொடர்பான பங்குகள் சரிவு போன்ற காரணங்களால் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 12ம் தேதி) சரிவுடன் முடிந்து இருக்கிறது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 101.87 புள்ளிகள் சரிந்து 19,041.13 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 28.60 புள்ளிகள் சரிந்து 5,760.20 எனும் அளவிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில், 20 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 10 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்திலும் முடிந்தன. இன்றைய வர்த்தக்கத்தில் டாடா பவர், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன. இவைகள் தவிர இன்போசிஸ், டி.சி.எஸ். போன்ற ஐ.டி. நிறுவன பங்குகளும், ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கி தொடர்பான பங்குகள் மற்றும் நுகர்பொருள் தொடர்பான பங்குகளும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|