பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
00:17
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், புதன்கிழமையன்றும் மோசமாகவே இருந்தது. ஏப்ரலில் தொழில் துறை வளர்ச்சி, மே மாத சில்லரை பணவீக்கம் குறித்து வெளியான Œõதகமற்ற தகவல்களால்,"சென்செக்ஸ்' 0.53 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், உலோகம் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய், எரிவாயு, வங்கி மற்றும் மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப் பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 101.87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,041.13 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 19, 143.24 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,969.08 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், கோல் இந்தியா உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்கு களின் விலை சரிவடைந்தும், ஜிந்தால் ஸ்டீல், சிப்லா உள்ளிட்ட,10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 28.60 புள்ளிகள் சரிவடைந்து, 5,760.20 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,792.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,738.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|