பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
10:44

புதுடில்லி : இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம், விரைவில் அது சரியாகும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் பேசியதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் பணவீக்கம் சீரான நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகநாடுகள் இந்திய பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. பொருளாதாரம் வலு பெற மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும். கடந்த சில தினங்களாக இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி பெரும் கவலையளிக்கிறது. ஆனால் இது தற்காலிகம் தான். ரூபாய் வீழ்ச்சியை கண்டு முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் இது சரியாகி ரூபாயின் மதிப்பில் எழுச்சி காணப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கை தான் மிக முக்கியம்.
கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் நேரடி அந்நிய முதலீட்டில் கட்டுபாடு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அந்நிய முதலீடு தொடர்பாக சந்திரசேகர் கொடுத்த அறிக்கை திருப்தியளிக்கிறது. இதுதொடர்பாக செபி ஜூன் 25ம் தேதி ஆலோசனை செய்ய உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|