தொடருது ரூபாயின் வீழ்ச்சி - மீண்டும் ரூ.58-ஐ தொட்டதுதொடருது ரூபாயின் வீழ்ச்சி - மீண்டும் ரூ.58-ஐ தொட்டது ... தங்கம் விலை உயர்வு! சவரனுக்கு ரூ.208 அதிகரிப்பு தங்கம் விலை உயர்வு! சவரனுக்கு ரூ.208 அதிகரிப்பு ...
ரூபாயின் வீழ்ச்சி சீராகும்! முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் - சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
10:44

புதுடில்லி : இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம், விரைவில் அது சரியாகும் என மத்திய நிதிய‌மைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் பேசியதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு ‌தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் பணவீக்கம் சீரான நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகநாடுகள் இந்திய பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. பொருளாதாரம் வலு பெற மேலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று தினங்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும். கடந்த சில தினங்களாக இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி பெரும் கவலையளிக்கிறது. ஆனால் இது தற்காலிகம் தான். ரூபாய் வீழ்ச்சியை கண்டு முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் இது சரியாகி ரூபாயின் மதிப்பில் எழுச்சி காணப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கை தான் மிக முக்கியம்.

கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் நேரடி அந்நிய முதலீட்டில் கட்டுபாடு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அந்நிய முதலீடு தொடர்பாக சந்திரசேகர் கொடுத்த அறிக்கை திருப்தியளிக்கிறது. இதுதொடர்பாக செபி ஜூன் 25ம் தேதி ஆலோச‌னை செய்ய உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)