இந்திய உள்நாட்டு உற்பத்தி உயரும் - உலக வங்கி!!இந்திய உள்நாட்டு உற்பத்தி உயரும் - உலக வங்கி!! ... தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சொத்து நிர்வகிப்பில் பரஸ்பர நிதியங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
00:51

மும்பை:பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்றமே மாதம், 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டில் உள்ள, 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பில் இது, புதிய சாதனையாகும்.
முறியடிப்பு:இதன் மூலம், நடப்பாண்டு ஜனவரியில், 8.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிர்வகித்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.மே மாதத்தில், நிதிச்சந்தையிலும், "இன்கம் பண்டு' "லிக்யுட் பண்டு'திட்டங்களிலும் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, "இன்கம் பண்டு' திட்டங்களின் கீழ் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6 சதவீதம் உயர்ந்து, 4.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், குறுகிய கால அடிப்படையில், கடன் பத்திர முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளன.அதிக வட்டி, பணவீக்கம் குறைவதற்கான அறிகுறி போன்றவற்றால், கடன்பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரித்துள்ளது.
பணப்புழக்கம்:இதேபோன்று வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரித்திருந்த காரணத்தால், "லிக்யுட் பண்டு' எனப்படும் நிதிச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் மீதான முதலீடு, 2.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 25 மாதங்களில் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.அதே சமயம்,மே மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 3,400 கோடி ரூபாய்அளவிற்கு, முதலீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இது, முந்தைய ஏப்ரல் மாதத்தில்,300 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற மே மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், பங்கு சார்ந்த பரஸ்பர திட்டங்களின் சொத்து மதிப்பு, 1.8 சதவீதம் (3,400 கோடி ரூபாய்) சரிவடைந்து, 1.75 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில், 11 மாதங்களாக பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப் படுவதால், ஆதாயம் கருதி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.வெளியேறிய முதலீடு
இதேபோன்று, மதிப்பீட்டு மாதத்தில், "கில்ட் பண்டு' திட்டங்களில் இருந்து, 500 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதற்கு முன், 2009ம் ஆண்டு, ஜூலையில் தான், மிக அதிகமாக, அதாவது 1,061 கோடி ரூபாய் முதலீடு வெளி‌யேறியது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற மே நிலவரப்படி, "கில்ட் பண்டு' திட்டங்களின் கீழ், பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, 255 கோடி குறைந்து, 8,900 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)