தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்புதாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு ... வங்கிகளின் உணவு சாரா கடன் ரூ.52.61 லட்சம் கோடி வங்கிகளின் உணவு சாரா கடன் ரூ.52.61 லட்சம் கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கட்டுக்குள் வரும் ரூபாய் மதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
01:12

மும்பை:மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பின் வீழ்ச்சி, ஓரளவிற்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.சென்ற திங்களன்று, ரூபாய்மதிப்பு, 58.14 ஆக சரிவடைந்தது. செவ்வாயன்று, இந்த வீழ்ச்சி, 58.40 ஆக அதிகரித்தது. அன்று, அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், வரலாறு காணாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு, 58.90 வரை சரிவடைந்தது. இந்நிலையில், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இத்துடன், புதன் அன்று, சர்வதேச தர நிர்ணயநிறுவனமான பிட்ச்., இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, இடர்பாடானது என்ற நிலையில் இருந்து, ஸ்திர தன்மைக்கு மாற்றியது.இதையடுத்து, ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில், டாலர்களை விற்பனை செய்தனர். வங்கிகளும் கூடுதலாக டாலரை புழக்கத்தில் விட்டன. இதன் காரணமாக, நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, 57.79ல் நிலை பெற்றது.
இந்நிலையில், நேற்று (வியாழன்), மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, ஐந்து அம்ச திட்டங்களை அறி விக்க உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். எனினும், ரூபாய்மதிப்பு, முந்தைய நாளை விட, 20 பைசா சரிவடைந்து, 57.99 ஆக நிலை பெற்றது. அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு, 58.38 வரை கீழிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)