பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
01:12
மும்பை:மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பின் வீழ்ச்சி, ஓரளவிற்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.சென்ற திங்களன்று, ரூபாய்மதிப்பு, 58.14 ஆக சரிவடைந்தது. செவ்வாயன்று, இந்த வீழ்ச்சி, 58.40 ஆக அதிகரித்தது. அன்று, அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், வரலாறு காணாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு, 58.90 வரை சரிவடைந்தது. இந்நிலையில், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இத்துடன், புதன் அன்று, சர்வதேச தர நிர்ணயநிறுவனமான பிட்ச்., இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, இடர்பாடானது என்ற நிலையில் இருந்து, ஸ்திர தன்மைக்கு மாற்றியது.இதையடுத்து, ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில், டாலர்களை விற்பனை செய்தனர். வங்கிகளும் கூடுதலாக டாலரை புழக்கத்தில் விட்டன. இதன் காரணமாக, நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, 57.79ல் நிலை பெற்றது.
இந்நிலையில், நேற்று (வியாழன்), மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, ஐந்து அம்ச திட்டங்களை அறி விக்க உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். எனினும், ரூபாய்மதிப்பு, முந்தைய நாளை விட, 20 பைசா சரிவடைந்து, 57.99 ஆக நிலை பெற்றது. அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு, 58.38 வரை கீழிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|