தாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்புதாவர எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் அதிகரிப்பு ... வெள்ளி விலை சரிவால் கொலுசு தொழிலாளர்கள் பாதிப்பு வெள்ளி விலை சரிவால் கொலுசு தொழிலாளர்கள் பாதிப்பு ...
வங்கிகளின் உணவு சாரா கடன் ரூ.52.61 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
01:26

புதுடில்லி:சென்ற மே மாதம் 31ம் தேதி நிலவரப்படி, முந்தைய 15 தினங்களில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 14.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 52,61,195 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.41 சதவீதம் அதிகரித்து, 69,66,529 கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. மேலும், டெபாசிட்டிற்கான தேவை, 11 சதவீதம் அளவிற்கும், குறித்த கால டெபாசிட், 12.2 சதவீதம் அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளது.பொருளாதார சுணக்கம், முதலீட்டு நடவடிக்கைகளில் மந்த நிலை போன்ற வற்றால், கடந்த மூன்று மாதங்களாக, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 15 சதவீதத்திற்கும் கீழாக குறைந் துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், புதிய திட்டங்களுக்காக, நிறுவனங்கள்,வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது மிகவும் குறைந்து போயுள்ளது. இதையடுத்து, வங்கிகள், வீட்டு வசதி கடன், வாகன கடன் உள் ளிட்ட சில்லரை கடன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கியு உள்ளன.
இதற்கு எடுத்துக்காட்டாக, நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, 10.25 சதவீத அடிப்படை வட்டி விகிதத்தில், வீட்டு வசதி கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில், "காசா' எனப்படும், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வளர்ச்சி, 38 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக குறைந்து போயுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)