பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
01:26
புதுடில்லி:சென்ற மே மாதம் 31ம் தேதி நிலவரப்படி, முந்தைய 15 தினங்களில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 14.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 52,61,195 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.41 சதவீதம் அதிகரித்து, 69,66,529 கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. மேலும், டெபாசிட்டிற்கான தேவை, 11 சதவீதம் அளவிற்கும், குறித்த கால டெபாசிட், 12.2 சதவீதம் அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளது.பொருளாதார சுணக்கம், முதலீட்டு நடவடிக்கைகளில் மந்த நிலை போன்ற வற்றால், கடந்த மூன்று மாதங்களாக, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 15 சதவீதத்திற்கும் கீழாக குறைந் துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், புதிய திட்டங்களுக்காக, நிறுவனங்கள்,வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது மிகவும் குறைந்து போயுள்ளது. இதையடுத்து, வங்கிகள், வீட்டு வசதி கடன், வாகன கடன் உள் ளிட்ட சில்லரை கடன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கியு உள்ளன.
இதற்கு எடுத்துக்காட்டாக, நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, 10.25 சதவீத அடிப்படை வட்டி விகிதத்தில், வீட்டு வசதி கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில், "காசா' எனப்படும், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வளர்ச்சி, 38 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக குறைந்து போயுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|