தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது ... சிமென்ட் விலை "கிடுகிடு' உயர்வு: ஒரு மூட்டை ரூ.325 ஆனது சிமென்ட் விலை "கிடுகிடு' உயர்வு: ஒரு மூட்டை ரூ.325 ஆனது ...
குறைந்த விலை பீர் கிடைக்காததால் "குடி'மகன்கள் திண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
12:21

"டாஸ்மாக்' கடைகளில், குறைந்த விலை, "பீர்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் விலை உள்ள, பீர் வாங்க வேண்டிய நிலைக்கு, "குடி'மகன்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 15க்கும் மேற்பட்ட பீர் வகைகள், ரகத்திற்கு ஏற்றவாறு, 70 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்திற்கு தேவையான பீர் வகைகள், வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. தற்போது, தமிழகத்தில், ஆறு பீர் தொழிற்சாலைகள் உள்ளதால், தேவையான அளவிற்கு பீர் வகைகள், இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. இதனால், பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. ஆனால், ஏற்கனவே குறைந்த விலைக்கு விற்பனையான முன்னணி நிறுவனங்களின், பீர் "பிராண்டு'களில் கூடுதல் பெயர் சேர்க்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உதாரணமாக, சில பீர் வகைகளில், "சூப்பர், மெகா ஸ்டிராங், மேக்ஸ்' என்ற பெயர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, டாஸ்மாக் கடைகளில், ஏழை "குடி'மகன்கள் அதிகம் வாங்கும், பீர் விற்பனை செய்யப்படாமல், 100 மற்றும் 110 ரூபாய் பீர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அதிக விலை கொடுத்து, பீர் வாங்க வேண்டிய நிலைக்கு, அனைத்து குடிமகன்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர் கூறும்போது, "பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அதிக விலை பீர்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது, பீர் விற்பனை குறைவிற்கு தான் வித்திடும்' என்றார்.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில்லரை தட்டுப்பாட்டை போக்கவே, 100 ரூபாய் பீர் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பும் பீரை, அதிக அளவு கொள்முதல் செய்கிறோம்' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)