காபி ஏற்றுமதி வருவாய் 25 சதவீதம் சரிவுகாபி ஏற்றுமதி வருவாய் 25 சதவீதம் சரிவு ... வலுவடையும் ரூபாய் மதிப்பு வலுவடையும் ரூபாய் மதிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பணவீக்கத்தால் பங்குசந்தைகளில் ஏற்றம்! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
16:59

மும்பை : வாரத்தின் இறுதிநாளில் நல்ல ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குசந்தைகள். சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிப்டி 109 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.

இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்து வந்தன. இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரத்தை இன்னும் சீர்திருத்துவது ‌தொடர்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி தற்காலிகம் தான், முதலீட்டாளர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று நம்பிக்கை அளித்தார். அதன்வெளிப்பாடாக இன்று(ஜூன் 14ம் தேதி) காலையே ஏற்றத்தில் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, பணவீக்கம் குறைந்தது. இதனால் இந்திய பங்குசந்தைகள் மேலும் உயர தொடங்கின.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 350.77 புள்ளிகள் உயர்ந்து 19,177.93-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 109.30 புள்ளிகள் உயர்ந்து 5,808.40 எனும் அளவிலும் முடிந்தன.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 26 பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகள் 3.15 சதவீதமும், இன்போசிஸ் 0.88 சதவீதமும், ஐ.டி.சி 1.41 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன. இவைகள் தவிர ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.

இந்திய பங்குசந்தைகள் போன்றே ஆசியாவின் பிற பங்குசந்தைகள் மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளும் உயர்வுடன் காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)