பதிவு செய்த நாள்
15 ஜூன்2013
00:13
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வெள்ளிக் கிழமையன்று, விறுவிறுப்புடன் இருந்தது. சென்ற மே மாதத்தில், பணவீக்கம் குறைந்துள்ளது மற்றும் மத்திய அரசு, அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் வகையில், ஐந்து அம்ச திட்டங்களை அறிவித்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
அமெரிக்காவில், சில்லரை விற்பனை மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள், எதிர்பார்ப்பை விட சிறப்பாக உள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட, அனைத்து துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 350.77 புள்ளிகள் அதிகரித்து, 19,177.93 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,213.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,952.09 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், மாருதி ”‹கி உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், விப்ரோ, சிப்லா உள்ளிட்ட, 4 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 109.30 புள்ளிகள் உயர்ந்து, 5,808.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,819.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,739.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|